வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x

கீழப்பாவூர் யூனியனில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் பஞ்சாயத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.9 லட்சத்து 90 ஆயிரம், குணராமநல்லூர் பஞ்சாயத்து முப்புலியூரில் ரூ.7 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, திரவியநகர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், அங்கன்வாடி மையத்திற்கு தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், யூனியன் துணை தலைவர் முத்துகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன்ராஜா, ஜான்சிஜெயமலர், பஞ்சாயத்து தலைவர்கள் தினேஷ்குமார், சுபாசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story