அடிக்கல் நாட்டு விழா


அடிக்கல் நாட்டு விழா
x

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே செட்டிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்திபுரத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஊராட்சி மன்ற நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். இதில் ஊர் பொதுமக்கள், பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story