ஸ்மார்ட் வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா


ஸ்மார்ட் வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா
x

முன்னீர்பள்ளம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் ேபரில் ரூ.29 லட்சம் மதிப்பில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ், துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர், உதவி ஆசிரியர் காந்தி ராஜா ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story