இலவச சைக்கிள் திட்ட தயாரிப்பு பணி மும்முரம்


இலவச சைக்கிள் திட்ட தயாரிப்பு பணி மும்முரம்
x

இலவச சைக்கிள் திட்ட தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அரியலூர்

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச சைக்கிள் பாகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் சைக்கிள் பாகங்களை பொருத்தும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும், மாணவர்களுக்கு வழங்குவதற்காக சைக்கிள் பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், இப்பணிகள் முடிந்ததும், விரையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்றனர்.


Next Story