கண்மாயில் மூழ்கி சிறுமி பலி


கண்மாயில் மூழ்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி பலியானார்.

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே ஏ.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருடைய மனைவி அங்காள பரமேஸ்வரி. இவர்களுடைய மகள் உமா மகேஸ்வரி (வயது 16), சிறுவயதில் இருந்தே மனவளர்ச்சி குன்றியதால் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை.

நேற்று மாலையில் அங்காள பரமேஸ்வரி துணிகளை துவைப்பதற்காக தனது மகள் பரமேஸ்வரியுடன் அங்குள்ள கண்மாய்க்கு சென்றார். அப்போது கண்மாயின் கரையில் அமர்ந்து இருந்த பரமேஸ்வரி எதிர்பாராதவிதமாக கண்மாயில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே இதனை கவனிக்காத உமா மகேஸ்வரி தனது மகள் பரமேஸ்வரி வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதி சென்று விட்டார். பின்னர் நீண்ட நேரமாகியும் மகள் மாயமானதை அறிந்து அவரை தேடினார். அப்போது பரமேஸ்வரி கண்மாயில் பிணமாக மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story