கண்மாயில் மூழ்கி சிறுமி சாவு


கண்மாயில் மூழ்கி சிறுமி சாவு
x

கண்மாயில் மூழ்கி சிறுமி சாவு

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஓம்சக்தி நகரில் வசித்து வருபவர் சித்தன். இவரது மகள் அமுலு (வயது 6). அதே பகுதியில் உள்ள பானாங்குளம் கண்மாய்க்கு தனது மாமனுடன் அமுலு சென்றாள்.

இந்த நிலையில் கண்மாய்கரையில் நின்று இருந்த அமுலு தனது மாமன் நீச்சல் அடித்து குளித்ததை கண்டு திடீரென்று கண்மாய் நீரில் அமுலு இறங்கினாள். அப்போது சேற்றில் கால் சிக்கி அமுலு உயிருக்கு போராடினாள். அதைக்கண்ட அவரது மாமன் அதிர்ச்சியில் அமுலுவை காப்பாற்ற முயன்றார். இந்த நிலையில் அமுலு நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story