விளையாடியபோது கால் தவறி விழுந்து சிறுமி பலி


விளையாடியபோது கால் தவறி விழுந்து சிறுமி பலி
x
தினத்தந்தி 10 Feb 2023 1:00 AM IST (Updated: 10 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

பனமரத்துப்பட்டி:-

மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 34). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு வைஷ்ணவி (வயது 5) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வைஷ்ணவி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சிறுமி கால்தவறி கீழே விழுந்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ரத்தக்காயம் எதுவும் ஏற்படாததால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மறுநாள் சிறுமிக்கு வலி ஏற்படவே பெற்றோர் மகளை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த வைஷ்ணவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story