சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
x

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி மாயம்

பொள்ளாச்சி அருகே பெற்றோருடன் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த சிறுமிக்கும், பொள்ளாச்சியில் தங்கி கட்டிட வேலை செய்யும் உத்தரபிரதேச மாநிலம் குஷின்நகரை சேர்ந்த முகேஷ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சிறுமி மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொள் ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாலியல் தொல்லை

விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முகேஷ் கடத்தி சென்றதும், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, கோவை ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த முகேஷ் மற்றும் சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் முகேசை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story