சிறுமியிடம் தவறாக நடந்த 2 பேருக்கு சிறை தண்டனை


சிறுமியிடம் தவறாக நடந்த 2 பேருக்கு சிறை தண்டனை
x

சிறுமியிடம் தவறாக நடந்த 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 28), தினேஷ் (25). இவர்கள் 2 பேரும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டி, தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி குற்றவாளிகளான துரைப்பாண்டி, தினேஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story