உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!


உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
x
தினத்தந்தி 21 Dec 2023 9:00 PM IST (Updated: 21 Dec 2023 10:04 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

அதேபோல, பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லையில் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!" என்று தெரிவித்து உள்ளார்.


1 More update

Next Story