காவலாளி திடீர் சாவு


காவலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 22 Aug 2023 7:00 PM GMT (Updated: 22 Aug 2023 7:00 PM GMT)

சங்கரன்கோவிலில் காவலாளி திடீரென்று இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- சேர்ந்தமரம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு தளவாய்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 60) என்பவர் தற்காலிக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று மதியம் டாஸ்மாக் கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர். அப்போது ராஜேந்திரன் பிணமாக கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story