தீயில் எரிந்து குடிசை நாசம்


தீயில் எரிந்து குடிசை நாசம்
x

தீயில் எரிந்து குடிசை நாசமதனமு

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம் ராம் நகரை சேர்ந்தவர் செல்ல பாண்டியன் (வயது 38). இவருடைய மனைவி முத்துமீனா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறி அருேக இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ெபாருட்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story