விபத்தில் காயமடைந்தவர் சாவு


விபத்தில் காயமடைந்தவர் சாவு
x

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தருவை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 73). இவர் சம்பவத்தன்று மேலமுன்னீர்பள்ளம் பஸ்நிறுத்தம் பகுதியில் மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் மோதி கணபதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று கணபதி சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story