விபத்தில் காயம் அடைந்தவர் சாவு


விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
x

விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் ஸ்ரீதர் (வயது 41). இவர் கடந்த 11-ந் தேதி விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

டானா மருதமரம் அருகே சென்றபோது மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story