விபத்தில் காயம் அடைந்தவர் சாவு


விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
x

விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து கட்டுடையார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் ரமேஷ் (வயது 38). தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்து, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story