காயம் அடைந்த தொழிலாளி சாவு

பத்தமடை பகுதியில் தவறி விழுந்து காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சேரன்மாதேவி:
பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). தொழிலாளியான அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ந் தேதி மது போதையில் அவரது வீட்டின் அருகே கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





