சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 6:46 PM GMT)

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது

விழுப்புரம்

விழுப்புரம்

சிறுமி பலாத்காரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் கடந்த 16.3.2020 அன்று மாலை அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அருங்குறுக்கை தெற்கு தெருவை சேர்ந்த சிவசக்தி மகன் ஜெயஜெமின்(28) என்பவர் தின்பண்டம் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை அருகில் உள்ள ஒரு கோவில் வளாகத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியை முட்டிப்போட வைத்து இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜெயஜெமின் மிரட்டினார்.

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

பின்னர் இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜெயஜெமின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட ஜெயஜெமினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயஜெமின், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.


Next Story