தாறுமாறாக ஓடிய லாரி, கொட்டகையின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம்


தாறுமாறாக ஓடிய லாரி, கொட்டகையின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம்
x

மின்கம்பத்தில் மோதி விட்டு தாறுமாறாக ஓடிய லாரி, கொட்டகையின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள பாலூரன்படுகை கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி சென்ற லாரிபூங்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. பின்னர் அந்த லாரி தாறுமாறாக ஓடி காளியம்மன் கோவில் முன்புறம் போடப்பட்டிருந்த கொட்டகை மீதும் மோதியது. இதில் அந்த கொட்டகை கீழே விழுந்தது.அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தடன் நின்று கொண்டிருந்த பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது25) என்பவர் மீதும் கீற்று கொட்டகை விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் வினியோகத்தை நிறுத்தினர்.இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story