சொகுசு கப்பலை திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு


சொகுசு கப்பலை திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு
x

கோப்புப்படம்

சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது


சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.

சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது .புதுச்சேரி அரசின் அனுமதியின்றி வந்ததை அடுத்து சொகுசு கப்பலை கடலோர காவல்படை திருப்பி அனுப்பியது


Next Story