தூக்கில் பிணமாக கிடந்த ஆண்


தூக்கில் பிணமாக கிடந்த ஆண்
x

தூக்கில் பிணமாக கிடந்த ஆண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

க.பரமத்தி,

தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூர் எல்லக்காட்டுவலசை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு சொந்தமான காட்டில் உள்ள வேப்பமரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த தண்டபாணி தென்னிலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story