வீடு புகுந்து நகை திருடியவர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 56). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டை சாவியை மறைத்து வைத்து தொழிலுக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஞானபிரகாசம் (30) என்பவர் சக்திவேல் வீட்டில் புகுந்து 17 கிராம் தங்கச்சங்கிலி, 7 கிராம் மோதிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி ஞானபிரகாசத்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





