குளத்தில் மண் அள்ளியவர் சிக்கினார்

வடக்கன்குளம் அருகே குளத்தில் மண் அள்ளியவர் சிக்கினார்.
வடக்கன்குளம்:
பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனீஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கனாபுரம் குளத்தில் மண் அள்ளுவதாக வந்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 2 லாரிகளில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் ஒருவர் லாரியை ஓட்டிக்கொண்டு தப்பிவிட்டார். மற்றொரு டிரைவர் சிதம்பராபுரத்தை சேர்ந்த துரை மகன் சுடலைமணி (29) என்பவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





