முதியவரிடம் பணம் பறித்தவர் கைது

முதியவரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி மேல சாலைத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 71). இவர் சம்பவத்தன்று தெரு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருக்குறுங்குடியை சேர்ந்த ரஞ்சித் மகன் அருண்குமார் (25) அரிவாளை காட்டி மிரட்டி பெருமாளிடம் ரூ.100 பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





