சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை

5 வயது சிறுமி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் 5 வயது சிறுமியை கடந்த 10.6.2022 அன்று சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி பலத்த காயங்களுடன் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு கூறினார். அதில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ.2 லட்சமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 1 வருட சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக அரசு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story