கோவிலில் திருடியவர் கைது

திசையன்விளை அருகே கோவிலில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள்வாண்டி ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 11½ கிராம் எடை உள்ள 3 பொட்டுதாலி, பீரோவில் இருந்த 10 ஜோடி வெள்ளி கண்மலர்களை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி கந்தசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குபதிவு செய்து, மூன்றடைப்பு முதலைகுளம் முத்துகிருஷ்ணன் (வயது 45) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளையும் போலீசார் மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





