சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது

சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் சிவகங்கையை அடுத்த கீழக்கண்டனி பகுதியில் போலீசாருடன் ரோந்து வந்தார். அப்போது அந்தப் பகுதியில் மானாமதுரையை அடுத்த வி.புதுக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் (வயது 27) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டு விசாரணை செய்தாராம். வெற்றிச்செல்வன் கையில் வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டி தாக்க முயன்றாராம். இதைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





