மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு  போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:45 PM GMT)

சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொசப்பாடி கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஏழுமலை, பழனி, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிவாஜி வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு கொசப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட வீட்டுமனைகளை அளந்து தேர்வு செய்யப்பட்ட 118 பேருக்கு பட்டா வழங்காமல் இருப்பதை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் பாஸ்கர், பிராபகரன், மேகலா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராயஉஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் முரளி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மீனா, கிளை நிர்வாகிகள் வெங்கடேசன், சின்னதுரை, விஜயகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story