வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு


வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
x

நெல்லை தாழையூத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் இறந்தார்.

திருநெல்வேலி

தாழையூத்து வண்ணாம்பச்சேரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகன் ஆறுமுகம் (வயது 49). கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். ஆறுமுகம் வழக்கமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்குவாா். அதேபோல் கடந்த 21-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டு மாடியில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது ஆறுமுகம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிர் இழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தாழையூத்து போலீசார், ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story