கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி


கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
x

கடம்பத்தூர் அருகே மகாசிவராத்திரி வழிபாட்டில் பங்கேற்ற போது கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த மெக்கானிக் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

மெக்கானிக்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் மேலாண்டை தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 42). இவர் கடம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் செஞ்சி கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனஞ்செழியன் கோவில் கோபுரத்தின் மீது ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

பரிதாப பலி

இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனஞ்செழியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story