ஆண்களுக்கான வாலிபால் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது

ஆண்களுக்கான வாலிபால் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான அணிகள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் வருகிற 11, 12-ந் தேதிகளில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்கும். முன்பதிவிற்கு 9443438912 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





