பால் வியாபாரி பலி


பால் வியாபாரி பலி
x

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நயினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் மாடசாமி (வயது 32). பால் வியாபாரியான இவர் நேற்று காலையில் சங்கரன்கோவில்- ராஜபாளையம் ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள டீக்கடையில் பால் ஊற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த மாடசாமியை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாடசாமிக்கு ராமசீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.


Next Story