மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி
x

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

கரூர்

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் அஜித் குமார்(வயது 26). இவர் திருச்சி தென்னூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மேலப்பட்டியில் இருந்து சேப்ளாப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் இது குறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து அஜித்குமாரின் சித்தப்பா துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story