விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது


விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
x

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக்குழு மற்றும் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மாறவர்மன் தலைமை தாங்கினார். செயலாளர் குகனேஸ்வரன் வரவேற்றார். இதில் சந்திரயான்-1 திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசியதாவது:-

424 செயற்கைக்கோள்கள்

இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைக்கோள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இத்துறையில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறி இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள 3 நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.இந்தியாவில் இருந்து வேளாண்மை, சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட தேச நலனுக்காக 125 அதிநுட்ப செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், வர்த்தக ரீதியில் 34 வெளிநாடுகளுக்கு 424 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளோம்.

பூமிக்கு கனிம வளம்

நிலவுக்கு இதுவரை 3 முறை விண்கலனை அனுப்பியுள்ளோம். நிலவில் உள்ள கனிம வளத்தை அடுத்த 3, 4 ஆண்டுகளில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய தயார் என சீனாவும் அறிவித்துள்ளது. ஆனால், நிலவின் தென் துருவத்தில் முதல் முதலில் இந்தியா ஆய்வை தொடங்கியது என்பதால் நம் நாடுதான் தலைமை பொறுப்பை ஏற்கும் அவசியம் உள்ளது. பூமிக்கு தேவையான கனிமவளத்தை நிலவில் இருந்து இன்னும் 10 ஆண்டுகளில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது

முன்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. இப்போது குறைந்த செலவில் செயற்கைக்கோளை ஏவும் நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு செயற்றைகோள் அனுப்புவது அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் 2021-ல் 1,200 செயற்கைக்கோள்களும், 22-ம் ஆண்டு 2,300-ம், நடப்பு ஆண்டு 3 ஆயிரம் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும்.

செலவு குறையும்

செயற்கைக்கோளை சிக்கனமான செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், எலான் மஸ்கை விட குறைந்த செலவில் செயற்கைக்கோளை அனுப்புவதற்கு குலசேகரபட்டினம் மண் உதவுகிறது. இப்போது செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்புவதற்கான பாகங்கள், சாதனங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு ஏவப்படுவதால் செலவு அதிகமாக இருக்கிறது.இந்த வசதிகள் அனைத்தும் குலசேகரபட்டினத்தில் ஏற்படுத்தினால் செலவு இன்னும் குறையும். இதில் தற்போது அரசு மட்டும் ஈடுபட்டுள்ளது. தனியாரும் இதில் ஈடுபட்டால் இன்னும் அதிக அளவில் செயற்கைக்கோளை அனுப்ப முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story