சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு


சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு
x

சோழசிராமணியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி பகுதியில் இருந்து சத்திபாளையம் செல்லும் தார்சாலையில் சாலையோரத்தில் சுமார் 70 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அந்த முதியவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முதியவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அங்கு சேர்த்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊர்? எதற்காக சோழசிராமணிக்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story