தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி


தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி
x

சூளகிரி அருகே தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே தோரிப்பள்ளி அருகே கானலட்டியை சேர்ந்த தொழிலாளி முனியப்பன் (வயது 63). இவர், கடந்த 1-ந் தேதி சக்கார்லு மலைப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை தேனீக்கள் கொட்டியது. இதில் காயம் அடைந்த முனியப்பனை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story