ஊரணியில் மூழ்கி முதியவர் சாவு


ஊரணியில் மூழ்கி முதியவர் சாவு
x

திருமயம் அருகே ஊரணியில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குழிபிறை காந்திஜி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 69). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள புது ஊரணிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஊரணியில் குளித்து கொண்டிருந்த போது, நீரில் மூழ்கினார். இந்நிலையில் குளிக்க சென்ற ராஜன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் ஊரணிக்கு சென்று பார்த்த போது ராஜன் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜன் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story