குட்டை தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு

மானூர் அருகே குட்டை தண்ணீரில் மூழ்கி முதியவர் இறந்தார்.
மானூர்:
மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 80). விவசாயியான இவர் கடந்த 20-ந் தேதி அந்த ஊரில் உள்ள சிறிய குட்டைக்கு சென்றார்.
அப்போது அவர் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். பழனியை காணாததால் அவரது மகன் கோவிந்தன் என்பவர் பல இடங்களிலும் தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பழனியின் உடல் குட்டையில் மிதந்தது. இதுகுறித்து கோவிந்தன் மானூர் போலீசில் புகார் செய்யவே, இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





