முதியவர் மயங்கி விழுந்து சாவு

பொன்னை அருகே முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஜம்புகுளம் அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 67). இவர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி காரணமாக பொன்னை அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் சாலையில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து பொன்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





