மயங்கி விழுந்த முதியவர் சாவு


மயங்கி விழுந்த முதியவர் சாவு
x

மயங்கி விழுந்த முதியவர் சாவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. சம்பவத்தன்று ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 60 வயதுடைய முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story