சுப நிகழ்ச்சிக்கு சென்ற முதியவர் மாயம்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற முதியவர் மாயமானார்.
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் யாகோப்(வயது 60). இவர் சம்பவத்தன்று கல்லக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழச்சியில் பங்கேற்க மொபட்டில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் யாகோப்பின் மனைவி பவுலின் பல்வேறு இடங்களில் தேடியும் யாகோப் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பவுலின் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





