பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:46 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் வலியுறுத்தினாா்.

விழுப்புரம்


அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கதிரேசன், பொதுச்செயலாளர் தசரதராமன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாநில துணைத்தலைவர் மூர்த்தி, துணை பொதுச்செயலாளர்கள் ராஜகோபால், சையத்ரகமத்துல்லா, ஜெயபாலன், மாநில தலைமை நிலைய செயலாளர் சையத்மொயினுதீன், மண்டல மாநில செயற்குழு உறுப்பினர் ஆசாத்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 2015 நவம்பர் முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும், அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை அரசு கருவூலம் வழியாக அரசே வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story