பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் தின விழா, நெமிலி வட்டாரத்தில் இயக்கம் தொடங்கி 15-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நெமிலி வட்டார தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் குணசேகரன் கலந்துகொண்டு பேசுகையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் 4 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிற காரணத்தினாலும், 3 அமைச்சர்களை கொண்ட குழு எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி முதல்-அமைச்சருக்கு உங்கள் கோரிக்கையை தெரிவிப்போம் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டோம்.

அகவிலை படியை நிலுவையுடன் சேர்த்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். இதில் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story