ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு
x

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story