கிணற்றில் குதித்தவர் நீரில் மூழ்கி பலி


கிணற்றில் குதித்தவர் நீரில் மூழ்கி பலி
x

ஜோலார்பேட்டை அருேக கிணற்றில் குதித்தவர் நீரில் மூழ்கி பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருேக கிணற்றில் குதித்தவர் நீரில் மூழ்கி பலியானார்.

விவசாயி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் மராட்டியன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40), விவசாயி. இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கலைவாணி 2 ஆண்டுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இவர்களின் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

அன்பழகன் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவரின் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை.

போலீசார் விசாரணை

விவசாய கிணற்றுக்கு குளிக்கச்சென்ற அண்ணன் இன்னும் திரும்பி வரவில்லையே என நினைத்த அவருடைய தம்பி அங்கு சென்று தேடி உள்ளார். அப்போது விவசாய கிணற்றில் அன்பழகன் பிணமாக கிடந்ததை பார்த்த தம்பி கதறி அழுதார்.

கிணற்றில் இருந்து அவரின் உடலை மேலே எடுக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து அவர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைத்துக்கும், ஜோலார்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்களும், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விவசாய கிணற்றில் மூழ்கி பலியான அன்பழகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story