மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது


மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது
x

மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

செங்கம்

மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம் அருகே உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தை வாலிபர் திருட ஒருவர் முயற்சி செய்து உள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அந்த நபர் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தீஸ்வரன் (வயது 38) என்பதும், செங்கம் சுற்றுவட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story