வியாபாரியை கல்லால் தாக்கியவர் கைது

நெல்லை டவுனில் வியாபாரியை கல்லால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் வ.உ.சி. தெருவில் நாகர்கோவிலை சேர்ந்த சரவணன் (வயது 43) என்பவர் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் சரவணனை கல்லால் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





