கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

வீரவநல்லூரில் கார் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மநாயகம் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனை மனதில் கொண்டு பிரம்மநாயகம், சரவணன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகளை உடைத்தும், சரவணனை அவதூறாக பேசியும் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து பிரம்மநாயகத்தை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





