விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி சாவு

கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடவள்ளி
கோவை வடவள்ளி அருகே மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மகன் சாவு
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ்சங்கர் (வயது 46). இவருடைய மனைவி நந்தினி (45). இவர்களது மகன் ரவி கிருஷ்ணா. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை கொண்டாட கல்லூரி நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் அங்கிருந்து நண்பர்களுடன் காரில் வீடு திரும்பினார்.
இவர்களது கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
தம்பதி விஷம் குடித்தனர்
இந்த நலையில் சஞ்சீவ்சங்கர்-நந்தினி தம்பதியினர் தங்களது ஓரே மகனை இறந்து துக்கத்தில் மிகவும் மனமுடைந்த காணப்பட்டனர். அவர்களுக்கு அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் துக்கம் தாக்காமல் இருந்த தம்பதி, வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர்-நந்தினி விஷம் குடித்தனர்.
இதற்கிடையில் செல்போன் அழைப்பை எடுக்காததால், சந்தேகத்தில் நந்தினியின் சகோதரன் அங்கு வந்தார். அப்போது சஞ்சீவ்சங்கரும், நந்தினியும் வாயில் நுரை தள்ளியப்படி உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






