விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி தென்னகர் கீழத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (32). ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பத்மநாபன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மநாபன் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





