மேள தொழிலாளிகளை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசார் கைது


மேள தொழிலாளிகளை கத்தியால் தாக்கிய வாலிபர்  போலீசார் கைது
x

மேள தொழிலாளிகளை கத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

மேள தொழிலாளிகளை கத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கலவையை அடுத்த குப்பிடிசாத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஆறுமுகம் (வயது 21). இவர் மேளம் அடிக்கும் இசைக்கலைஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செங்கனாபுரம் கிராமத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் மேளம் அடிக்க ஆறுமுகம், அவரது நண்பர் தினேஷ் சென்றுள்ளனர்.

இரவு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது பென்னகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்க மகன் அஜித் (24), வெங்கடேசன் ஆகிய இருவரும் ஆறுமுகத்தையும் தினேசையும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளனர். அருகே இருந்தவர்கள் தடுத்தபோது அஜித்தும் வெங்கடேசனும் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த ஆறுமுகம் தினேஷ் ஆகிய இருவரும் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை செய்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆறுமுகம், அவரது மாமா நிலத்தில் நுங்கு, பனங்காய் வெட்டியபோாது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆறுமுகத்தை தாக்கியதாக அஜீத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.==========

1 More update

Next Story